குறள் நெறி
குறள் நெறி

@arakkarperiyar

10 تغريدة 4 قراءة Dec 27, 2022
பார்ப்பனீயபீடை வர்ணாஸ்ரம சாக்கடையோடு வந்தபோது காலுக்கால் பாய்ச்சலில் ஓடோடிப் போய் அதில் வாய் வைத்தது, தமிழினத்தைக் ஆரிய நரிகளுக்கு காட்டிக் கொடுத்தது ஆட்சியிலிருந்த அரசர்கள் மட்டுமல்லாது,
பண்பாட்டுத் தளத்தில் சைவ வேளாள முதலியார்களுமே!
இன்றுவரை அதிலிருந்து மீள போராடுகிறோம்.
1/N
ஆனால் ஒடுக்கபட்ட மக்கள் பார்ப்பன மேலாண்மையை எதிர்த்தே வந்திருக்கின்றனர்.
சில நூற்றாண்டுக்கு முன்னமே உத்தரநல்லூர் நங்கை என்கிற பெண் பார்ப்பனீயபீடையின் அயோக்கியத்தனங்களை தனது பாடல்களின் மூலம் காரி உமிழ்ந்திருக்கிறாள்.
அந்த பாடல்களில் சில...👇
2/N
1. ஓதிய நூலும் பொய்யே உடலுயிர் தானும் பொய்யே
சாதியும் ஒன்றை யல்லால் சகலமும் வேற தாமோ
வேதியன் படைத்த தல்லால் விதியினை வெல்லல் ஆமோ
பாதியிற் பழியே சூழ்ந்த பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
3/N
2
கொக்குமேற் குடுமி கண்டேன் கோழிமேற் சூடும் கண்டேன்
நெக்குறு வாலும் கண்டேன் நீரின்மேல் நெருப்பும் கண்டேன்
சற்குணம் என்று சொல்லிச் சதுர்மறை பேச வேண்டாம்
பக்குவம் அறிந்து பாரும் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
4/N
3
வெற்றிலை தாழை வாழை வித்தொன்று முளைப்ப தொன்றோ
பற்றிய யோனி பேதம் பாருளோர் அறிந்தி டாமல்
பெற்றவர் தம்மைத் தேடிப் பிறந்திருந் திறந்து போனார்
பற்றிநின் றலைவ தேனோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
5/N
4
குலம்குலம் என்ப தெல்லாம் குடுமியும் பூணும் நூலும்
சிலந்தியும் நூலும் போலச் சிறப்புடன் பிறப்ப துண்டோ
நலந்தரு நான்கு வேதம் நான்முகன் படைத்த துண்டோ
பலந்தரு பொருளும் உண்டோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
6/N
5
மகம்கொண்ட தேகம் தன்னில் மற்றொரு சுத்தம் காணீர்
அகம்கண்டு புறமும் கண்டும் அவனுக்கே தார மானேன்
சுகம்கண்டு துக்கம் கண்டு சுக்கில வழியே சென்று
பகம்கொண்ட தேனோ என்னில் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
(மகம் = மதம்)
7/N
6
ஊருள பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து நெருப்பிலே நெய்யை விட்டுக்
கார்வயல் தவளை போலக் கதறிய வேதம் தானும்
பாரைவிட் டகன்ற தாமோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
8/N
7
சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனிக் கந்தம் நாறும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அவர்மணம் வீசக் காணோம்
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேற தாமோ
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
9/N
8
ஒருபனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறிவினில் அறிந்த வர்க்கே அதுவும் கள் இதுவும் கள்ளே
ஒருகுலை உயர்ந்த தேனோ ஒருகுலை தாழ்ந்த தேனோ
பறையனைப் பழிப்ப தேனோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
எதற்கு செய்கிறோம்னு தெரியாமலே,முன்னோர்கள் செய்தார்கள்னு செய்யும் வறட்டு சடங்களை தவிர்
10/10

جاري تحميل الاقتراحات...