சமரன் ரமேஷ்
சமரன் ரமேஷ்

@samaranRamesh

20 تغريدة Nov 19, 2024
மேஜர் சரவணன் கதையை எடுக்காமல் மேஜர் முகுந்த் வரதராஜன் கதையை தேர்வு செய்து படமெடுத்திருக்கின்றனர் கமலும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும்.
மேஜர் சரவணன் கார்கில் போரில் உயிரைவிட்ட வீர் சக்ரா விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த இன்னொரு ராணுவ வீரர். 1/n
தமிழ்நாட்டு மக்களால் மிகவும் அறியப்பட்ட ராணுவ வீரர். தமிழ்நாடு சாரந்த ராணுவ வீரர் பற்றி ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்றால் மேஜர் சரவணன தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவார். இத்தனைக்கும் அவர் கார்கில் போரில் எதிரிகளை மிகத்தீரமாக எதிர் கொண்டவர். 2/n
அவரின் வாழ்வை திரைப்படமாக எடுத்திருந்தால் இன்னும் சாகசங்களை திரையில் காட்டி இருக்க முடியும். ஆனால் முகுந்த் வரதராஜனின் கதையை தேர்வு செய்தது ஏன்?
அப்படியானால் சாகசம் இங்கு பிரதானமானது அல்ல. வேறு என்னவாக இருக்க முடியும்?? 3/n
முகுந்த வரதராஜனை போர்க்குற்றவாளியாக வேறு காட்சி படுத்தியதால் கடும் எதிர்வினையை சந்தித்து கொண்டிருக்கிறார் அமரன் படத்தின் இயக்குநர். 4/n
சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு எதிராக திரைப்படத்தில் முகுந்த வரதராஜனை summary execution செய்வதாக சித்தரித்து அவரின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதாக சித்தரித்திருக்கின்றனர். இதனாஅ தான் சாகசத்துக்காகவும் காதலுக்காகவும் இந்த கதையை தேர்வு செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. 5/n
முகுந்த வரதராஜன் பணியாற்றிய ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் என்ற பிரிவு பற்றி ஆராய்ந்தோமேயானால், உண்மையில் இந்திய ராணுவத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்ட பிரவு அது.
2010 ல் மச்சில் போலி எண்கவுண்டர்(Machil fake encounter) என்ற நிகழ்வு தான் ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் முதன்முறையாக 6/n
இந்திய ராணுவம் தன்னுடைய ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்த நிகழ்வு. எந்தவித விசாரனையும் இல்லாமல் மூன்று காஷ்மீரி இளைஞர்களை சுட்டுக்கொன்றதால் காஷ்மீரில் பதற்றம் தொற்றிக் கொண்டு ராணுவத்துக்கும் மக்களுக்குமான மோதல் அதிகரிக்கவே வேறு வழியின்றி 7/n
ராணுவம் 'Court of inquiry' நடத்தி அவர்களை 'Court martial' செய்து ஆயுள் தண்டனை கொடுத்துள்ளது.
தண்டனை வழங்கப்பட்ட ரந்தீப் சிங்க 2014 ல் ராணுவ தீரப்பாயத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை படித்தால் புரியும் அங்கு காஷ்மீரி மக்கள் எப்படி ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் 8/n x.com
சில ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டனர் என்று. தீர்ப்பில் ஒரு இடத்தில்(படத்தை பார்க்கவும்) ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட கலோனல் ரந்தீப் சிங் எப்படி எந்தவித எதிரப்பும் இல்லாத போதும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது என்பதை 9/n
ராணுவ விசாரனை அறிக்கையில்(Adverse confidential report - ACR) அவரை விசாரித்த ராணுவ அதிகாரி பதிவு செய்திருக்கிறார்.
AFT என்பது ஆயுதம் தாங்கிய படையினரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்காகவே இந்திய அரசால் உருவாக்கப்பட்ட தீர்ப்பாயம். 10/n
aftdelhi.nic.in
இப்படியாக பதிர்பால் என்கவுண்டர்(Pathirbal encounter),குப்வாரா என்கவுண்டர்(Kupwara encounter),சோபியன் என்கவுண்டர்(Shopian encounter)என ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் நடத்திய போலி என்கவுண்டர்களை ராணுவ நீதிமன்றம் விசாரித்து தொடர்புடைய ராணுவ வீரர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 11/n
மிக சமீபமாக 2020 ல் ஜம்முவின் அம்சிபோரா நடந்த போலி எண்கவுண்டர் நடத்திய கேப்டன் பொறுப்பில் உள்ளவரை ராணுவத்திலிருந்து நீக்கியுள்ளது. அதற்கான லிங்க் கீழே உள்ளது.
இதுதான் ராஜ்குமார் பழனிசாமியும், கமலும் காட்டாத ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் இன்னொரு முகம். 12/n
m.economictimes.com
இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி குற்றமும் நீரூபிக்கப்பட்ட ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பற்றி ஏன் படமெடுக்க வேண்டும் என்ற கேள்வி நியாயம் தானே.
அடுத்து ஜெய் பஜ்ரங்கபலி கோஷத்திற்கு வருவோம். ஒரு படைப்பிரிவின் கோஷம் அதன் படைவீரர்கள் சார்ந்ததாக இருக்கும்.13/n
உதாரணமாக மெட்ரஸ் ரெஜிமெண்ட் 'வீர மதராசி. அடி கொல்லு' என்பதாக இருக்கிறது. ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு மிகச் சமீபமாக 1990 களில் காஷமீரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படைப்பிரிவு. இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரில், 14/n
சிவனை வழிபடும் காஷ்மீரி பண்டிட்டுகள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதியில் அவரகளுக்கு எந்தவித தொடர்புமில்லாத, 'ஜெய் பஜ்ரங்கபலி' என்று அனுமனை முன்னிறுத்தும் கோஷத்தை ஏன் வைக்க வேண்டும்??? 15/n
ராமர் கோயில் அரசியலை தூக்கி பிடிக்கும் சங்கிகளால் தான் இப்படியான கீழ்த்தனமான வேலைகளை செய்ய முடியுமென்று யோசித்துக் கொண்டே ஆராய்நதால் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இயங்கிய ஜக்மோகன் என்ற சங்கி கவர்னரால் உருவாக்கப்பட்டது தான் இந்த ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்.16/n
மேஜர் சரவணன் பற்றிய கதையை எடுத்திருந்தால் காஷ்மீரிகளை குறிப்பாக காஷ்மீரி இஸ்லாமியர்களை குற்றவாளியாக சித்தரிக்க முடியாது. அதுவே உள்நாட்டில் இயங்கும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பற்றி படமெடுத்தால் காஷ்மீரி மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முடியும் அல்லவா. 17/n
ஆக இங்கு தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரரோ அல்லது சாகசமோ திரைப்படத்தின் நோக்கமல்ல. மாறாக காஷ்மீர் மக்களை குறிப்பாக இஸ்லாமியர்களை குற்றவாளிகளாக தீவிரவாதிகளாக சித்தரிக்க, பல போலி எண்கவுண்டர்கள் நடத்திய ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பற்றி படமெடுத்திருக்கிறார் சங்கி ராஜ்குமார் பெரியசாமி.18/n
தன்னுடையை இஸ்லாமிய வெறுப்பிற்கு ஒத்துபோவதால் தயாரித்திருக்கிறார் சங்கி கமல்.
இதை கேள்விகேட்டால் நம்மை தேசவிரோதி என்பார்கள். ஆங்கிலேயருடன் நீங்கள் சேர்ந்து எங்களை அடக்கி ஆண்ட போது 19/n
உங்களையும் ஆங்கிலேயரையும் ஒரு சேர திப்பு சுல்தானுடனும், சுபாஷ் சங்திர போஸ் உடனும் இணைந்து நின்ற எதிர்த்த வரலாறுடா எங்களுடையது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் கமலுக்கு சொல்கிறோம்.ராணுவத்தின் பின்னால் ஒழிந்து கொண்டால் விட்டுவிடுவோமா??? அதான் கொண்டை நன்றாக தெரிகிறதே!!! n/n

جاري تحميل الاقتراحات...