13 تغريدة 10 قراءة Mar 17, 2024
#மூடனின்_வாட்ஸப்_முட்டுக்கள்
பாஜக மட்டுமா? திமுகவும் தானே வாங்கி இருக்கு
காங்கிரசும் தானே தேர்தல் பத்திரம் வாங்கி இருக்கு. ஏன் பாஜகவை மட்டும் குற்றம் சொல்றீங்க?
#விளக்கம்
இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் கட்சிகளுக்கு யார் யாரெல்லாம் தேர்தல் நிதி கொடுக்கலாம்.
எவ்வளவு கொடுக்கலாம். நிறுவனங்கள் நிதி கொடுப்பதாக இருந்தால் அதற்கான விதிமுறைகள் என்ன.
அதன் மூன்றாண்டு கால நிகர லாபம் என்ன?
அதில் இருந்து எவ்ளோ நிதி அளிக்கலாம் போன்ற வரையறைகள் இருந்தன?
அதெல்லாம் போக ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது.
பாஜக வெளிப்படைத்தன்மையை உடைத்தது.
எவனும் எவ்வளவும் கொடுக்கலாம். எல்லாம் பரம ரகசியம்னு அயோக்கியத்தனம் பண்ணுனாங்க.
ஆண்டுக்கு 10 கோடி லாபம் பார்க்கும் நிறுவனம் 100 கோடி தேர்தல் பத்திரம் பாஜக பெயரில் வாங்கி இருக்கிறான்.
அதனால் இப்படி திருட்டுத்தனமான வெளிப்படைத்தன்மையற்ற சட்டத்தை கொண்டு வந்த பாஜகவை திட்டுகிறோம்
#மட்டியின்_வெட்டி_வாதம்
இதனை எதிர்த்தது வாக்களித்த திமுக, காங்கிரஸ்
எப்டி தேர்தல் பத்திரம் வாங்கலாம்?
#விளக்கம்
தேர்தல் கட்சிகள் நிதி வாங்குவது ஒன்றும் புதிதல்ல.
பாஜக கொண்டு வந்த புது விதமான விதிமுறையின் கீழ் தான் ஏனைய அரசியல் கட்சிகளும் நிதி வாங்கியாக வேண்டும்
பாஜக புது
விதிகளை கொண்டு வந்தது என்பதற்காக ஆட்டத்தில் இருந்து வெளியே போக முடியாது.
பாஜகவின் புதிய விதியை எதிர்த்தாலும் எதிர்த்து வாக்களித்தாலும் அது நடைமுறைக்கு வந்தால் அதன் அடிப்படையில் தான் அரசியல் செய்தாக வேண்டும்.
திமுக, காங்கிரஸ் தேர்தல் நிதி வாங்கியதில் எந்த தவறும் இல்லை.
நாம் இங்கே பார்க்க வேண்டியது என்னவென்றால் பாஜக யாரிடம் எல்லாம் தேர்தல் பத்திரம் வாங்கியது எந்த சூழலில் வாங்கியது எவ்வளவு வாங்கியது என்பதை தான்
உதாரணமாக எங்கெல்லாம் ஐடி ரெய்டு நடத்தினார்களோ அங்கெல்லாம் அதன் பின்னர் பாஜகவுக்கு கோடி கோடியாக தேர்தல் பத்திரம் குவிந்து இருக்கிறது.
#மடையனின்_கடைசி_முட்டு
எல்லா கட்சிக்கும் பிஜேபி உதவி செய்து இருக்கு? பிஜேபி வாங்கியதை விட எதிர்கட்சிகள் அதிகமாக வாங்கி இருக்கே?
#விளக்கம்
திமுகவா வருமான வரித்துறையை வைத்து நிறுவனங்களை தனி நபர்களை மிரட்டி வழிப்பறி செய்திருக்கிறது?
பாஜக தானே ED ய கலெக்சன் ஏஜென்ட் ஆக்கி இருக்கு
#ரெய்டு_முன்னே_நிதி_பின்னே
லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தில் ரெய்டு நடந்த பிறகு 1400 கோடி தேர்தல் பத்திரம் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.
வெறும் தேர்தல் நிதி என்பது வேறு.
ஆனால் என்ன நன்மைகளை பாஜக அவர்களுக்கு செய்து கொடுத்து இருக்கிறது ?
அது மக்கள் நலனா விரோதமா ?
எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பாஜவுக்கு அள்ளி இறைத்து
மக்களாவது மயி..ராவது என்று தான்தோன்றித் தனமாக பாஜக ஸ்டெர்லைட் விசயத்தில் செயல்பட
அடிமை எடப்படியை ஏவி துப்பாக்கி சூட்டை நடத்தி பதிமூன்று பேரை கொல்ல காரணம் அனில் அகர்வால் பாஜகவுக்கு கொடுத்த தேர்தல் பத்திரங்கள்.
மும்பை கோவா புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. அதில் கிட்டத்தட்ட முப்பது பேர் இறந்து போனார்கள்..பலரை காணவில்லை.
அதே போல சுரங்க கட்டுமான விபத்தில் நாற்பதுக்கும் மேலானோர் சிக்கிய சம்பவம்..
இப்படியான விபத்துகளின் பின்னால் பாஜகவின் தேர்தல் பத்திர பகல் கொள்ளை இருக்கிறது
இது போன்ற விபத்துகளை நிகழ்த்திய கட்டுமான நிறுவனம் நூற்றுக்கணக்கான கோடிகளை பாஜகவுக்கு கொடுத்த பிறகே இந்த ஒப்பந்தங்களை கொடுத்து இருக்கிறார்கள்.
பெரிய வரலாறோ அனுபவங்களோ இல்லாத நிறுவனம் எல்என்டி போன்ற பிரபல வரலாறு படைத்த நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி இந்த ஒப்பந்தங்களை வாங்கி
மக்களை இதுபோன்ற கேவலமான கட்டுமானத்தின் மூலம் மக்களை காவு வாங்குகிறது.
இது அப்பட்டமான ஊழல் இல்லியா? மக்களின் உயிரை குடிக்கும் நரவேட்டை இல்லியா?
இன்னொரு பக்கம் தேர்தல் பத்திரம் வாங்கிய பின் முறைகேடுகளில் சிக்கிய நிறுவனங்களின் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது..
பாஜக செய்திருக்கும் இத்தனை அயோக்கியத்தனங்களால் தான் பாஜகவை செருப்பை கழற்றி அடிக்க வேண்டி இருக்கிறது
அவனும் நிதி வாங்கி இருக்கான் நீயும் நிதி வாங்கி இருக்க.
அதனால பாஜகவும் காங்கிரசும் ஒண்ணு அதிமுகவும் திமுகவும் ஒண்ணு என மொண்ணைகள் செத்த சாத்திட்டு இருப்பது உத்தமம்
#ஆன்டனி_வளன்

جاري تحميل الاقتراحات...