𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

@im_inba1

6 تغريدة 3 قراءة Jan 03, 2024
1.தமிழ்பிராமணர்கள் அதிகாரத்தில் இருந்து மெல்லமெல்ல விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
2. தமிழ்பிராமணர்கள் சமூகத் தளத்தில் அவமதிக்கப்படுகிறார்கள்
3. தமிழ்பிராமணர்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டை தக்கவைக்க அனுமதிக்கப்படுவதில்லை.
4 இந்நிலைகாரணமாக தமிழ்பிராமணர்கள் மெல்லமெல்ல
தமிழகத்தைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.
- ஜெயமோகன்.
தமிழகப் பார்ப்பனர்களின் நிலை பற்றிய நீண்ட ஆய்வுக்கட்டுரையில், அவர்கள் இந்த நிலைகளில் என்னவாக இருக்கிறார்கள் என இறுதித் தீர்ப்பு வழங்குகிறார் ஜெயமோகன். அதை எப்படிச் சொல்கிறாரென்றால், 'நானறிந்த வகையில்... நான்
பார்த்த வகையில்.. நான் கேட்ட வகையில்' என்பதாக இருக்கிறது. அக்ரஹாரத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு ஆய்வு செய்தால் அப்படித்தான் இருக்கும் மிஸ்டர்.
தமிழகத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
1. சென்னை ஐ ஐ டியில் தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக, சமஸ்கிருதத்தில் பாடும் அளவிற்கு
அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
2. ஆடிட்டர் குருமூர்த்தி முன்னாள் முதல்வரையும், முன்னாள் துணை முதல்வரையும் 'இம்போடண்ட்' எனவும், எஸ்.வி.சேகர் 'ஊடகத் துறை பெண்களெல்லாம் அடுத்தவர்களுடன் படுத்து எழுந்தவர்கள்' எனவும், 100 ஓட்டு வாங்கி சாரணர் தேர்வில் கூட ஜெயிக்க முடியாத ஹெச்.ராஜா,
உயர்நீதி மன்றத்தை மயிர் எனவும் சொல்லிப் பிறரை அவமதிக்கிறார்கள்.
3. பார்ப்பனர்களின் பண்பாடான 'கருவறைக்குள் எங்களைத் தவிர யாரும் நுழையக் கூடாது' என்ற பண்பாட்டை இன்றுவரை பேணிப்பாதுகாத்தே வருகின்றனர்.
4. தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் பார்ப்பனர்கள் பயந்துபோய் வெளியேறுவதில்லை.
வருமானம் எங்கு அதிகமாகக் கிடைக்கிறதோ அங்கு இடம் பெயர்வது பார்ப்பனர்களின் வழக்கம்.
கண்ணெதிரே இவ்வளவு நடப்பது தெரிந்தும், பார்ப்பனர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பெழுதுகிறார் 'நாட்டாமை' ஜெயமோகன்.
தோழர் புலியூர் 2021 பதிவு .

جاري تحميل الاقتراحات...