Theni Siraj
Theni Siraj

@thenisiraj

13 تغريدة 12 قراءة Oct 30, 2023
பெரியார் பற்றி பேரறிஞர் அண்ணா சொன்னது..
தமிழர் வரலாற்றில் முக்கியக் கட்டம்!
" நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.
இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார் நான் அவருடன் இணைந்த போது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.
அதற்கு முன் முப்பது ஆண்டுகள் பணியாற்றி வந்திருக்கிறார்.
1/n
இந்த "ஆண்டுகள்" தமிழரின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகள்.
"திடுக்கிட வைக்கிறாரே! திகைப்பாக இருக்கிறதே! எரிச்சலூட்டுகிறாரே!ஏதேதோ சொல்லுகிறாரே! என்று கூறியும், விட்டுவைக்கக் கூடாது!
ஒழித்துக்கட்டியாக வேண்டும்! நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று மிரட்டியும் தமிழகத்துள்ளோரில்
2/n
பலர் பேசினர்;ஏசினர்;பகைத்தனர்;
எதிர்த்தனர்;ஏளனம் செய்தனர்;மறுப்பு உரைத்தனர்.
ஆனாலும் மூலையில் நின்றாகிலும்,மறைந்திருந்தாகிலும் அவர் பேச்சை கேட்ட வண்ணம் இருந்தனர்.அந்த பேச்சு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது.
எதிர்த்தவர்கள்,ஏளனம் புரிந்தவர்கள்,ஏனோதானோ என்று
3/n
இருந்தவர்கள், தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்.
கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்;
அவருடைய பேச்சோ தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது. மலைகளைத் துளைத்துக் கொண்டு,கற்களை உருட்டிக் கொண்டு காடுகளை கழனிவளம் பெறச்
4/n
செய்து கொண்டு ஓசை நயத்துடன்,ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார்,இங்கே பேசுகிறார்,அதைக் குறித்துப் பேசுகிறார்,இதை குறித்துப் பேசுகிறார் என்று தமிழகம் இந்த ஐம்பது ஆண்டுகளாக கூறிவருகிறது.
மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் - எது நேரிடினும் - என்ற உரிமைப்போர், அவருடைய வாழ்வு
5/n
முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை.
இன்று அனைவரும் பெற்றுள்ளனர் இந்த வெற்றியின் விளைவுகளை. இந்த தமிழகத்தில் தூய்மையுடன்,மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப்
6/n
பட்டிருக்கிறது.
அறிவுப்புரட்சியின் முதற்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பாளர் பெரியார்! இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண்டின் அளவு,மிகப்பெரியது.
தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை, இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாது.
பிற பகுதியினர் இதுபற்றிக்
7/n
கேள்விப்பட்டபோது வியர்த்துப் போகின்றனர். அப்படியா! முடிகிறதா!நடக்கிறதா!விட்டு வைத்திருக்கிறார்களா? என்று கேட்கிறார்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு.
அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி,லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இதுபோன்ற பல நகரங்களில் என்னையும் உடன்
8/n
அழைத்துக் கொண்ட பெரியார் சுற்றுப்பயணம் செய்த போது ஒவ்வொரு ஊரிலேயும் இதுபோலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்! அந்த பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள் பெரிய பெரிய ஏடுகளை,எழுதுவார்கள் அழகழகான கட்டுரைகளை,கூடி பேசுவார்கள் சிறிய மண்டபங்களில் போலீசு
9/n
பெற்றுக் கொண்டு! இங்கு?
இங்கா! இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித்திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்த புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது!
ஏ! அப்பா ! ஒரே ஒருவர் அவர் நம்மை அச்சு வேறு,ஆணி வேறாக எடுத்து வீசுகிறாரே என்று இந்நாட்டை
10/n
என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த பழமை அலறலாயிற்று!
புதுப்புது பொருள் கொடுத்தும், பூச்சு மெருகு கொடுத்தும் இன்று பழமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும்,விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதனை அறியாதார்
11/n
இல்லை!.
எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை நான், ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல, ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை."
என்றார் பேரறிஞர் அண்ணா.
தற்போது பெரியாரின் கருத்துக்கள் இந்திய ஒன்றியத்தின் திக்கெங்கும் பரவ தொடங்கியது. மேலும்
12/n
#Speaking4India என்ற சேனல் மூலம் மக்களின் முதல்வர் @mkstalin உரை பல மொழிகளில் எல்லா மாநிலங்களிலும் சென்றடைந்தது.
பழம் கட்டு கதைகளை நம்பவைத்து வெற்றி பெற பாசிச அயோக்கியர்கள் முயற்சிக்கிறார்கள். இதனை முறியடிக்க ஒற்றுமையுடன்
#INDIAAlliance வலுப்படுத்தி வெற்றி பெற வேண்டும்.

جاري تحميل الاقتراحات...