24 تغريدة 47 قراءة Aug 21, 2023
மண்டியிடுதல் என்பது ஆதிகாலத்தில் இருந்தே மனிதர்களிடம் இருக்கிறது. விலங்குகள் இன்னொரு விலங்கிடம், 'சரணாகதி அடைந்துவிட்டேன் என்னை ஒன்னும் செய்துவிடாதே' என்பதை காட்ட உடம்பை குறுக்கி crouching position க்கு வரும்.
அதே சமயம், 'நான் உன்னைவிட பெரியவன் என்கிட்ட வம்பு பண்ணாத' என காட்ட முன்னங்காலை தூக்கி நிமிர்ந்து நிற்கும். ஒரு விலங்கு முன்னங்காலை தூக்கி நிமிர்ந்து நின்றால் அது attacking position. அதுவே உடம்பை குறுக்கி படுத்தால் submissive position. இதே பழக்கம் தான் மனிதர்களிடமும் இருக்கிறது.
ஒருவர் முன் மண்டியிட்டால், நான் உன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டேன் எனப்பொருள். பல மதங்களில், கடவுள் முன் மண்டியிடுகிறார்கள். யூதர்களை பொறுத்தவரை, கால் முட்டி என்பது symbol of strength.
(Hebrew மொழியில் b’racha என்றால் knee. இதில் இருந்துதான், அதாவது kneel in submission என்ற பொருளில் இப்போது prayer க்கு b’racha என்கிறார்கள்) அதை மடக்குவது என்பது முழு சரணாகதியை குறிக்கிறது. ரொம்ப சோகமான வருத்தமான செய்தியை கேட்கும்போது, நாம் நிலை தடுமாறுகிறோம்
நமது முட்டி நம்மை தாங்குவதில்லை, உடல் சரியில்லாதபோது நம்மால் நிற்கமுடிவதில்லை. இப்படி நாம் பலவீனமாக இருக்கும்போது நமது முட்டி செயல்படுவதில்லை. திரௌபதி பிடித்திருந்த புடவையை விட்டுவிட்டு கிருஷ்ணனை கூப்பிடும்போது கிருஷ்ணன் அவளுக்கு அருளுகிறார்.
'என் சக்தி எல்லாம் ஒன்னுமில்ல என்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை இனி எல்லாம் கடவுள்' என்ற அந்த சரணாகதிக்கு ஒப்பானது தான் முழங்கால் இடுவது.
இந்த முழு சரணாகதி, கடவுளையன்றி வேறு யாரிடமும் இருக்கக்கூடாது என்பதற்காக தான் ஆப்ரஹாமிய மதங்கள் மனிதர்கள் முன்னிலையில் மண்டியிடுவது,
காலில் விழுவதை பாவம் என்கின்றன. இஸ்லாமிய மதத்தில் prayer வெறும் முட்டி போடுவது மட்டுமல்ல. முட்டி போடுவது, அமருவது, தலையால் நிலத்தை தொடுவது என, அது ஒரு complete surrender process.
கிரேக்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் தான் prayer அப்போ முட்டி போடுவாங்க.
ஆண்கள் போட மாட்டார்கள் (ஆ ஆ ஆண் நெடில்!). ஆரம்பத்தில் Roman Catholic church Sunday congregational வழிபாட்டின் போது எல்லாரும் நின்றால் போதும் என்றது. வீட்டில தனியா prayer பண்ணும்போது முட்டி போடுங்க. church ல போட தேவையில்லை என்றது.
British monarchy, அரசர் முன்பு 2 காலையும் சேர்த்து முட்டியிட வேண்டாம் ஒரு காலை மட்டும் மடித்து முட்டியிட்டால் போதும் என்றது மதம் காரணமாக. (கடவுளின் முன் மட்டுமே முழு சரணாகதி) இதையே தான் ஒரு பெண்ணை propose செய்யும்போதும் செய்கிறோம் ஒற்றை கால் முட்டி. “took-a-knee”
இந்த ஒற்றை கால் முட்டி பாதி சரணாகதி தான். நான் எப்போ வேண்டுமானாலும் திரும்ப எழுந்துவிடுவேன் எனப்பொருள்.
கடவுள் முன்னிலையில் பக்தி காரணமாக மண்டியிடுகிறோம், அரசர் (அதிகாரம்) முன்பு மண்டியிடுகிறோம்,
'என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்னை உனக்கே அர்ப்பணிக்கிறேன்' என ஒரு பெண்ணின் முன் மண்டியிடுகிறோம், பிச்சை கேட்கும்போது மண்டியிடுகிறோம், அதாவது நாம் vulnerable ஆக இருக்கும்போது, அது emotional ஆகவோ அல்லது physical ஆகவோ, நாம் பலவீனமாக இருக்கும்போது மண்டியிடுகிறோம்.
முழங்கால் போடுதல் ஒரு vulnerable position ஐ குறிக்கிறது. அதனால் தான் சரணடையும்போது நம்மை மண்டியிட சொல்கிறார்கள், கொல்லும்போது மண்டியிட சொல்கிறார்கள்.
so, முட்டிபோடுதலின் பொருள், "நான் ஒண்ணுமே இல்லைங்க நீங்கதான் எல்லாம். உங்கள் ஆணைக்கு நான் கட்டுப்படுகிறேன். நான் உங்கள் அடிமை."
அதனால் தான் Aristotle, மனிதன் மண்டியிடுவது காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்றார்.
நான் உங்கள் அடிமை என சொல்லும் இந்த position அ, American footballer Colin Kaepernick ஒரு political statement ஆ பயன்படுத்தினார்.
match ஆரம்பிக்கும் முன், American தேசிய கீதம் பாடும் போது நிற்காமல், ஒற்றை கால் மண்டியிட்டார். அதாவது, 'நீ (America) இன்னும் என்னை அடிமையா (கருப்பர்களை) தான் வச்சு இருக்க' என்பதை குறிக்க. அதே சமயம் ஒற்றை கால் முட்டி நான் மீண்டும் எழுவேன் என்பதையும் சொல்கிறது.
தேசிய கீதம் பாடும்போது யாரும் மண்டியிடுவதில்லை (நாம் நாட்டுக்கு அடிமையில்லை) எழுந்து நிற்கிறோம். எழுந்து நிற்பது தான் மரியாதை. மண்டியிடுதல் submission.
சரி முழங்கால் இடுவதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் பார்த்தோம். இதன் சாராம்சம் முழங்கால் இடுவது "அடிமை" என்பதை குறிக்கிறது.
Bending a knee is not a display of respect, but rather a demonstration of submissiveness.
முழங்கால் இடுவதே அடிமைத்தனம் என்றால், காலில் விழுவது? இந்த முழங்கால் இடும் பழக்கம் உலகெங்கும் இருக்கிறது. உலகெங்கும் இதற்கு விமர்சனமும் இருக்கிறது.
உலகையே ஆண்ட British monarchy கூட 2 கால் முட்டியில் இருந்து, ஒற்றை கால் முட்டி அதில் இருந்து, curtsy சும்மா முதுகை வளைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் உலகிலேயே எங்கும் இல்லாத ஒரு பழக்கம் இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறது.
அது, 'படுத்தேவிட்டனாயா' என்னும் காலில் விழும் பழக்கம்.
நாம் செய்யும் physical actions க்கும் நமது mental states க்கும் ஒரு தொடர்பு இருக்கிறது அதுதான் "embodied cognition." உதாரணமா confident மக்கள் நல்லா நிமிர்ந்து நிப்பாங்க, கண்ணை பார்த்து பேசுவாங்க.
இது அவங்க mental state, physical action ல எதிரொலிக்குது. அதே சமயம் confident இல்லாத நபர், தொடர்ந்து நேர நிற்பது கண்ணை பார்த்து பேசுவது போன்ற விஷயங்களை செய்து வந்தால் அவரது physical action, mental state ல எதிரொலிக்கும் confidence வரும்.
அதனால தான் மிலிட்டரியில் posture க்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பார்கள். நமது தொடர் செய்கை, நமது எண்ணங்களை influence செய்கிறது இதற்கு பெயர் embodied cognition.
அதனால் தான் மூளை சலவையில் physical actions முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒருவர் காலில் நாம் சும்மா விழறோம் அப்படினு வச்சுப்போம். 'நான் அந்த ஆளை பெரிய ஆள் என்றெல்லாம் நினைக்கல. எங்க அம்மா சொன்னாங்கன்னு சும்மா விழுந்தேன்' என்று நாம் நினைக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக ஒருவர் காலில் நாம் விழும்போது, அது நம்மை அறியாமலேயே submissiveness க்கு வழிவகுக்கிறது.
நமது மூளை physical action க்கும் அது தொடர்புடைய social or emotional meaning க்கு ஒரு connection ஏற்படுத்தி கொள்ளும்.
மதம் என்பதே ஒரு மிகப்பெரிய மூளைச்சலவை கம்பெனி. மரியாதைக்காக காலில் விழு, ஒரு reverence காக விழு, நம்ம கலாச்சாரம், நல்ல விஷயம்,
முன்னோர்கள் சொன்னார்கள், விழுந்து எழுந்தா முதுகுக்கு நல்லது, ஆசீர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி, நம்மை, 'நீ எனக்கு கீழே. நான் சொல்றதை கேளு' என்று நம்மை அறியாமல் மூளை சலவை செய்கிறது.
நாம் ஒருவர் காலில் விழும்போது அல்லது ஒருவர் முன் மண்டியிடும்போது எதிரில் இருக்கும் அந்த நபருக்கு நம் மேல் authority இருக்கிறது என நம் மூளை நம்புகிறது. அவர் எது சொன்னாலும் அது சரியாக தான் இருக்கும். அதை பின்பற்ற வேண்டும் என மூளை தீர்மானிக்கிறது.
இது எவ்வளவு பெரிய ஆபத்து?!

جاري تحميل الاقتراحات...