Theni Siraj
Theni Siraj

@thenisiraj

7 تغريدة 11 قراءة Jul 26, 2023
#கலைஞர்100
1970 களின் மத்தியில் தான் வலது கையை உயர்த்தி ஐந்து விரல்களையும் பிரித்து உதய சூரியன் போல காட்டும் வழக்கம் கலைஞருக்கு வந்தது.
கலைஞர் அப்படி ஐந்து விரல்களை பிரித்து காட்டுவதை பற்றி MGR கிண்டல் அடித்தார்.
"நான் பஞ்சமா பாதகன்" என்று சொல்லாமல் சொல்லுகிறார்
1/n
கருணாநிதி என்று காலையில் பேசினார் MGR.
அன்று இரவு சென்னையில் கலைஞரின் பொது கூட்டம் ஒன்று.
வழக்கமான இவர்களே, அவர்களே, என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என்ற துவக்கமும் இல்லாமல் கலைஞர் சொன்னார்.
ஐந்து விரல்களை காட்டுகிறார் கருணாநிதி.
பஞ்சமா பாதகன் என்று சொல்லாமல்
2/n
சொல்கிறார் என்று நண்பர் mgr சொன்னார்.
தமிழ் இலக்கியம் அறிந்திருந்தால் ஐம்பெருங்காப்பியங்கள் நினைவுக்கு வந்திருக்கும்.
தொல் காப்பியம் தெரிந்திருந்தால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐவகை தினைகள் நினைவுக்கு வந்திருக்கும்..
மகாபாரதம் படித்திருந்தால் பஞ்ச
3/n
பாண்டவர் நினைவுக்கு வந்திருப்பர்.
சங்கீதம் அறிந்தவர் என்றால் தியாகய்யரின் பஞ்ச ரத்ன கீர்த்தனை நினைவுக்கு வந்திருக்கும்.
ஆனால் நண்பருக்கு பஞ்சமா பாதகம் நினைவுக்கு வந்திருக்கிறது" என்று சொல்லி நிறுத்தினார்.
ஆரவாரம் அடங்க வெகு நேரமாயிற்று.
பிறகு ஆராம்பித்தார் அந்த அவர்களே,
4/n
உடன் பிறப்புகளே என்று....
அது தான் நினைவுக்கு வருகிறது.
I. N. D. I. A. என்று எதிர்கட்சிகள் அணிக்கு பெயர் வைத்து பத்து நாள் கடந்த பிறகு நரேந்தர் தாமோதரனுக்கு East India compeny நினைவுக்கு வந்திருக்கிறது.
அவருக்கென்ன. மகானுபாவர்..
கார்ப்பரேட்டுகளுடன் குலாவுபவர்.
5/n
I. N. D. I. A. என்றால் கம்பெனி நினைவு தான் வரும்.
சுதந்திர போராட்ட வீரர் என்றால், போராட்ட வரலாறு படித்தவர் என்றால் Quit India நினைவு வந்திருக்கும்.
பாரத் மாதா கி ஜே என்ற முழக்கம் ஆத்மார்த்தமாக இருந்தால் East India compeny நினைவுக்கு வருமா?
தீவிரவாதத்தை தூண்டும்
6/n
பாசிச அயோக்கியர்களுக்கு தீவிரவாதிகளின் நினைவுதான் எப்போதும்..
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக தான் தெரியும்..
நன்றி: Vinomohan, Rajkumar Narasinghan.
#JokerModi
@hihareesh @Hereprak @baldeagle_offic @Chandrumlpt @ntypeq @wpsdillibabu @robert_ruban @VIS1976AL @DmkSymon

جاري تحميل الاقتراحات...