அன்பெழில்
அன்பெழில்

@anbezhil12

19 تغريدة 680 قراءة Jul 14, 2023
#சங்கல்ப_மந்திரம்
கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம் சொல்வதன் கணித அறிவை, அதன் அருமையை புரிந்து கொள்வது என்பது, இந்த மானிட ஜென்மத்தின் சிறப்பை தெரிந்து கொள்வதற்கு சமம். சங்கல்ப
மந்திரத்தின் கணக்கு தெரியாமல் அந்த மந்திரத்தை சொல்லுவதால் எந்தப் பயனும் இல்லை! கோவிலில் அர்ச்சனை செய்யும்போதோ அல்லது ஒரு சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளான திருமணம் மற்றும் பூஜை, திதி, சிராத்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யும் போதோ, முதலில் ஸங்கல்பம் செய்கிறோம். அப்படி சங்கல்பம்
செய்யும் போது கூறும் சம்ஸ்கிருத மந்திரங்களின் விவரங்களை நாம் ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
#சங்கல்பம் : "மாமோ பாத்த: ஸமஸ்த: துரிதக்ஷய த்வார: ஸ்ரீபரமேஸ்வர: ப்ரீத்யர்த்தம்.. என்று ஆரம்பித்து ஆத்யப்ரஹ்மண: த்விதிய ப்ரார்தே ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மந்தரே, அஷ்டாவிம்ஸதிதமே,
கலியுகே, ப்ரதமே பாதே ஜம்பூத்வீதே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சாலீவாஹண ஸகாப்தே அஸ்மிந்வர்த்தமானே வ்யவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி: ஸம்வத்ஸராணாம் மத்யே.”அன்றைய தினத்திற்க்கு உள்ள திதி, வார, நக்ஷத்திரத்தைப் உச்சரித்து ஸங்கல்பம் செய்கிறோம்.
சங்கல்ப மந்திர கணக்கு என்றால்
மிக எளிமையான நமக்குத் தெரிந்த கணக்குதான் அது.
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம் (அதாவது 3000' x 60 வருடங்கள்)
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மானுட வருடங்கள் (கணக்கதிகாரம்). தற்போது இதில் பாதி முடிந்து விட்டது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம். ஸ்வேதவராஹ கல்பம் என்றால் இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ
கல்பம் எனப்படும். #வாயு_புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக் கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.
#வைவஸ்வத_மன்வந்தரம் என்றால் நடந்து கொண்டிருக்கும்
ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது. 14 மன்வந்திரங்களாவன என்பவை:
1.ஸ்வாயம்புவ மன்வந்திரம் 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம்
3.உத்தம மன்வந்திரம்
4.தாமச மன்வந்திரம்
5.ரைவத மன்வந்திரம்
6.சாக்‌ஷுஷ மன்வந்திரம்
7.வைவஸ்வத மன்வந்திரம்
8.சாவர்ணிக மன்வந்திரம்
9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம்
10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம்
11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம்
12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம்
13.தேவ சாவர்ணிக மன்வந்திரம்
14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
அதாவது நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிற 7வது மன்வந்திரமாகிய #வைவஸ்வத
மன்வந்திரத்தில் இருக்கிறோம். அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே
(71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று பார்த்தோம் அல்லவா, ஆகவே வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம்,
கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது). இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும். இதுவரை வந்தது கால அளவைகள். அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள்.
#ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின்
பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். #த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன.
(1. ஜம்பூ த்வீபம் {நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது}
2. பிலக்ஷ த்வீபம்
3. சான்மலி த்வீபம்
4. குச த்வீபம்
5. க்ரௌஞ்ச த்வீபம்
6. சாக த்வீபம்
7. புஷ்கர த்வீபம்)
#பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கிறோம்.
(1. பாரத வர்ஷம்
2.ஹேமகூட
வர்ஷம்
3. நைஷத வர்ஷத்ம்
4.இளாவ்ருத வர்ஷம்
5. ரம்ய வர்ஷம்
6. ச்வேத வர்ஷம்
7. குரு வர்ஷம்
8. பத்ராச்வ வர்ஷம்
9.கந்தமாதன வர்ஷம்)
#பரத கண்டே- பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. (1.பரதகண்டம்
2. கிம்புருகண்டம்
3. அரிவருடகண்டம்
4. இளாவிரதகண்டம்
5. இரமியகண்டம்
6. இரணியகண்டம்
7. குருகண்டம்
8. கேதுமாலகண்டம்
9.பத்திராசுவகண்டம்)
இதில் நாம் (பாரத தேசம்) பரத கண்டத்தில் வசிக்கிறோம்.
மேரோர் தக்‌ஷிணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்தில் இருக்கிறோம். எண்ணற்ற பிரம்மாகளின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின்
படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மேலே சொல்லப்பட்டு உள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய #காரி என்பவர் எழுதிய #கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டு உள்ளது. கணக்கதிகாரம் மிக
அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது. அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது. ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல்
வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப் பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்! ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக்
கூறிவிட முடியும். இவ்விதம் காலமானம் பேசப்படுகிறது இது தான் சனாதன சமய கால கணக்கீட்டில் மிகச்சிறிய பகுதி, மேலும் வான சாஸ்திரத்தை (Astronomy) அறிய அதன் பெருமையை பேச நமக்கு வாழ்நாள் போதாது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#அறிவோம்_பாரதத்தின்_ஆன்மீக_அறிவியல்

جاري تحميل الاقتراحات...