Theni Siraj
Theni Siraj

@thenisiraj

9 تغريدة 110 قراءة May 01, 2023
அறிஞர் அண்ணா 1968 அமெரிக்கா பயணத்தின் ஊடே போப்பாண்டவரைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.
"அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து
1/n
தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.
போப்பாண்டவர் "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!" என்றார். தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.
அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து
2/n
"உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார்.
"என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா.
"கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர்.
"போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும்
3/n
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டார் அண்ணா.
சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.
போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று
4/n
விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார்.
ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், "யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில்
5/n
இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே" என்று கேட்டார்.
"அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா.
நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, "நீங்கள் மிகவும் நேசிக்கும்
6/n
கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா.
உடைந்து போன ரானடே, "நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்" என்றார்.
அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அண்ணா துயில் கொள்ளும்
7/n
மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.
போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர் தான் நம் அறிஞர் அண்ணா.
இதை படித்தவுடன் உளம் உருகாத அண்ணாவின் தம்பிகள் இருக்க முடியாது.
உயர்ந்த லட்சியம் கொண்ட
8/n
பேரறிஞர் அண்ணா புகழ் திக்கெட்டும் பரவ வேண்டும்..
#பேரறிஞர்_அண்ணா
@TRBRajaa
@hihareesh @kmpeye @Hotel_Dubakoor @Karthikbalan84 @GDiyash @pidisambal @isai_ @karikaalan555 @jaya2016maha @aliyarbilal @RajkumarMadhav5 @malarvili1998 @sandhiyaTweets_ @ajmeer1973 @niayayakkural

جاري تحميل الاقتراحات...