அன்பெழில்
அன்பெழில்

@anbezhil12

17 تغريدة 14 قراءة Mar 02, 2023
#ஶ்ரீவைஷ்ணவம்
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் பத்துவிதமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
அவை:
1. அத்வேஷி.
2. அனுகூலன்
3. நாமதாரி
4. சக்ராங்கி
5. மந்திரபாடி
6. வைஷ்ணவன்
7. ஸ்ரீ வைஷ்ணவன்
8. ப்ரபந்நன்
9. ஏகாந்தி
10. பரம ஏகாந்தி
#அத்வேஷி
விஷ்ணுவின் பேரிலும் அவனது அடியார்களிடத்திலும்
துவேஷம் (வெறுப்பு) கொள்ளாமல் இருப்பவன் அத்வேஷி
#அனுகூலன்
அத்வேஷியாக இருப்பதோடு, வைஷ்ணவர்களோடு நட்புடன் நடந்து கொள்வது, பெருமாள் கோவிலுக்கு செல்வது, உற்சவங்களில் கலந்து கொள்ளுதல், அடியவர்களை போற்றுவது, அவர்களுக்கு மரியாதை செய்து உபசரிப்பது, மற்ற வைஷ்ணவர்களோடு இணைந்து செயல்படுவது
இவை அனைத்தையும் விருப்பத்துடன் செய்பவன் அனுகூலன்.
#நாமதாரி
முன்சொன்ன குணங்களோடு மஹா விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக வைத்து இருப்பவன்.
#சக்ராங்கி
மேலே சொன்ன மூன்றோடு, வேத சாஸ்திரங்களில் சொன்னபடி மஹா விஷ்ணுவின் திவ்ய ஆயுதங்களான சங்கு சக்கர சின்னங்களை ஆசார்யன்
மூலமாகத் தன் தோள்களில் தரித்து, திருமண் காப்பு தரித்து இருப்பவன்.
#மந்திரபாடி
முன் சொன்ன நான்கோடு, சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கவல்ல, பகவத் மந்திரமான திருஎட்டெழுத்து மந்திரத்தை ஆச்சார்யன் மூலமாக உபதேசம் பெற்று, ஜபித்து காரியசித்தி பெறுபவன்.
#வைஷ்ணவன்
மேலே சொன்ன ஐந்தையும்
மேற்கொண்டு, ஐம்புலன் இன்பங்களையும், இதர தேவதைகளை வழிபடுவதையும் விட்டவன், மோக்ஷம் அடைவதற்கு உரிய வழிகளான கர்ம ஞான அல்லது பக்தி மார்க்கங்களை கடைபிடிப்பவன்.
#ஸ்ரீவைஷ்ணவன்
முன் சொன்ன ஆறையும் கடைபிடித்து, ஒழுகுகின்ற எண்ணையானது பிசிறு இல்லாமல் ஒழுகுவது போல, சிந்தனையானது வேறு நினைவு
இல்லாமல், சிந்தாமல் சிதறாமல் ஸ்ரீமந் நாராயணனை மட்டும் மனத்தில் நிலை நிறுத்தி, அவனை தியானிப்பவன்.
#ப்ரபந்நன்
மேலே சொன்ன ஏழு தகுதிகளோடு,
பகவானை அடைவதற்கு பிரபத்தி நெறியாகிய சரணாகதியே தகுந்தது என்று பிரபத்தியை கடைபிடிப்பவன்.
வேதசாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள
கர்ம ஞான பக்தி யோகங்களை
கடைபிடிப்பது கடினமானது, அப்படியே கடை பிடித்தாலும் பகவானை அடைய பலபிறவிகள் எடுக்க வேண்டி வரும். ஆகையால் சரணாகதியின் மூலமாகவே பகவானை அடையப் பாடுபடுபவன்.
#ஏகாந்தி
முன்சொன்ன எட்டு தகுதிகளோடு, எம்பெருமானை அடைய தான் மேற்கொள்ளும் சரணாகதியும் ஏற்றதல்ல என்று முடிவு செய்து, அந்த பகவானையே
உபாயமாகப் பற்றிக் கொள்ளுபவன்.
#பரம_ஏகாந்தி
மேற்சொன்ன ஒன்பது தகுதிகளோடு பகவானை அடைய சரணாகதி மேற்கொள்ளுவதும், பகவானை உபாயமாக பற்றிக் கொள்ளுவதும் கூட கடினமானது தான். ஆகவே நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் நல்லதொரு ஆச்சார்யனை சரணமடைந்து, அவர் மூலமாக எம்பெருமானை அடையலாம் என்று
முடிவு எடுப்பவன். மேலே சொன்ன பத்து விதமான வைஷ்ணவத் தகுதிகளில், முதல் ஆறு தகுதிகளை ஆச்சார்யனிடம் பஞ்சசம்ஸ்காரம் பெறுவதின் மூலமாக அடைந்து விடலாம், ஆச்சார்யனிடம் சங்க சக்கர முத்திரைகளை பெறுவதன் மூலமாக சக்ராங்கி ஆகலாம், தாஸ்யநாமம் பெறும்போது நாமதாரி ஆகலாம் .
ரகஸ்யத்ரயம் பெறும் போது
மந்திரபாடி ஆகலாம். இதன் பிறகு மற்ற தேவதைகளை வழிபடுவது தானாகவே நின்று போவதால் வைஷ்ணவனாக ஆகலாம் . மீதமுள்ள நான்கையும் நாம் முயற்சி செய்து அடைந்துவிடலாம், மேலோட்டமாக பார்த்தால் சுலபமாகத் தோன்றும். ஆனால் உண்மையாக கடை பிடிப்பதுதான் முக்கியம். ஶ்ரீவைஷ்ணவத்தை கடைபிடிப்பவர்கள், இது வரை
பஞ்ச சம்ஸ்காரம் பெறாதவர்கள், நல்ல முமுக்ஷுவாக இருக்கும் ஆச்சார்யனை சரணம் அடைந்து பஞ்சசம்ஸ்காரம் உடனடியாக பெற்றுக் கொள்வது நல்லது. பிறகு பார்ப்போம் என்று தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும். மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள். இனி வரப் போகும் கலிகாலம் கொடுமையாக இருக்கும். ஆகவே
எம்பெருமானார் சம்பந்தமுள்ள நல்லதொரு ஆச்சார்யனிடம் உடனே சரணம் அடைந்து பரமபதத்திற்கு செல்லும் வழியைப் பார்க்க வேண்டும். முதலில் பிரமச்சாரியத்தில் தவறவிட்ட சாஸ்திரங்களை வர்ணஸ்ரமத்தில் பிடிப்பது வயோதிகம், ஞாபககுறைவு, உச்சரிப்பு தவறு போன்றவற்றால் கடினம். நாம ஸ்மரணமும் சரணாகதியே
முக்திக்கு வழி. இதைத் தவிர 11வது பிரிவும் உள்ளது. பிள்ளை லோகாசார்யர் சாஸ்த்திரத்தின் சாரத்தை ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் மூலம் வெளியிட்டருளினார். இதன் முடிவில், “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்”, அதாவது சிஷ்யனிடத்தில் ஆசார்யனின் கருணையே சிஷ்யனின் கைங்கர்ய ப்ராப்திக்கு வழி என்பதை
அருளியுள்ளார். இந்தக் கொள்கையை பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (மணவாள மாமுனிகளின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவர்) தன்னுடைய திவ்ய க்ரந்தமான அந்திம உபாய நிஷ்டையில், பல உதாரணங்களுடன் அழகாக விளக்கியுள்ளார். அந்திம=சிறந்த/எல்லையான, உபாய=வழி, நிஷ்டை=நிலைத்து நிற்றல். இதன் பொருள் ஆசார்யனிடத்தில
முழுமையாக அடி பணிந்து இருத்தல். இந்த ஆசார்ய நிஷ்டை மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வாரிடத்திலும், ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரிடத்திலும், தெய்வவாரி ஆண்டானுக்கு ஆளவந்தாரிடத்திலும், வடுக நம்பிக்கு எம்பெருமானாரிடத்திலும் இருந்தது. இந்த நிலைக்குச் #சரம_பர்வ_நிஷ்டை என்றும் ஒரு பெயருண்டு.
பகவானிடம் முழுமையாக அடிமை கொண்டிருத்தல் ப்ரதம் பர்வ நிஷ்டை (முதல் நிலை) என்றும் ஆசார்யனிடம் அவ்வாறு இருப்பது சரம பர்வ நிஷ்டை (முடிந்த நிலை) என்றும் சொல்லப்படுகிறது . ஈஶ்வர ஸம்பந்தம், பந்தமோக்ஷங்கள், இரண்டுக்கும் பொதுவாயிருக்கும் ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே காரணமாயிருக்கும்.
உதாரணம்: வடுகநம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையரென்பர்.
ஆழ்வார் ஆசார்யர் எம்பெருமானார் ஜீயர் தேசிகன் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

جاري تحميل الاقتراحات...