பாக்டீரியா
பாக்டீரியா

@Bacteria_Offl

10 تغريدة Apr 20, 2023
மதம் அறிவியலிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நிகழ்வு!
இத்தாலி நாட்டின் பைசா நகரில், வானவியலின் தந்தை என்றழைக்கப்படும் #Galelio_Galilei (15-02-1564) பிறந்தார்
மதம் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும்.
காரணம் ஆதாரமற்ற நம்பிக்கையை விட ஆதாரத்தின் அடிப்படையிலான‌ விஞ்ஞானம் உண்மையானது, பலமானது, நேர்மையானது. அப்படி மதத்தை மண்டியிட செய்தவர்களுள் கலிலீயோ மிக முக்கியமானவர்.
நவீன வானவியலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் இவர் இசை கலைஞரின் மகனாகப் பிறந்தார்.
பைசா நகரில் பள்ளி படிப்பை முடித்தார். கணிதத்துறை பேராசிரியராக பைசா பல்கலைகழகத்திலும் படூவா பல்கலைகழகத்திலும் பணிபுரிந்தார். ஏற்க்கெனவே இருந்து வந்த தொலை நோக்கியைத் தம் ஆய்வுத் திறனால் மேலும் செழுமைப்படுத்தினார்.
உலகம் தட்டை என்றும், பிரப‌ஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருகின்றன என்றும் பைபிள் சொல்ல, அதை கிருஸ்தவம் நம்பிக்கொண்டிருந்த கால கட்டத்தில்... சில துணைக்கோள்கள் வியாழன் கிரகத்தை சுற்றி வருவதைக் கண்டறிந்தார்.
மத உலகைப் பொருத்தவரை இது ஒரு அதிர்ச்சியான தகவலாக இருந்தது. கடவுளின் வார்த்தையான "பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன" என்பதை முறியடிப்பதென்றால் சும்மாவா..?
உண்மையில், இந்த மூட நம்பிக்கைக்கு முதல் அடி கொடுத்தவர் கோபர்நிக்கஸ்.
சூரியனை மய்யப்படுத்திய, "பூமி உட்பட சூரிய குடும்ப கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றூகின்றன" என்ற‌ அவரின் கண்டுப்பிடிப்பை வழிமொழிந்தவர் புருனோ.
மதவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மதம் யானைக்கு மட்டுமல்ல, மனிதனுக்கு பிடித்தாலும் ஆபத்தாயிற்றே..!
கொலைக்காரர்கள் கல்லால் அடித்தே கோபர் நிகசைக் கொன்றார்கள். புரூனோவோ உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.அதே கருத்துகளைத்தான் கலிலீயோ வும் ஆதாரத்தோடு கூறி உறுதிப்படுத்தினார். மதம் மருண்டது என்றாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.
மாறாக வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
விண்ணைப் பார்த்து ஆய்ந்து ஆய்ந்து அந்த இரு விழிகள் படிப்படியாக பார்வையை இழந்து கடைசிக் காலத்தில் முற்றிலும் பார்வையற்றவரானார். 1642 சனவரி 8ல் மரணம் அடைந்தார். கலிலீயோ மறைந்து சுமார் நூறு ஆண்டுகள் கழித்து 1737ம் ஆண்டு
அவரது உடல் கல்லைறையிலிருந்து எடுக்கப்பட்டு சாண்டாகிளாஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
360 ஆண்டுகளுக்குப் பிறகு 1992 அக்டோபர் திங்களில்...
ரோமன் கத்தோலிக்க மதப்பீடம் கணித வல்லுநர் வானியல் விஞ்ஞானி கலிலீயோ கண்டுப்பிடித்துச் சொன்ன கருத்து சரிதான் என்று ஒப்புக் கொண்டது. கலிலீயோ வுக்கு அளிக்கப்பட்ட தண்டனை தவறு என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது கத்தோலிக்க மத பீடம்..!

جاري تحميل الاقتراحات...